என்பிபி அரசின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை
தற்போதைய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, பணமோசடி சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, பணமோசடி சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு முடிவு செய்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ரங்க திசாநாயக்க தெரித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீதான இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கோப்பு 49 ஆவதாக பட்டியலிடப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்கு தொடரப்பட்டால், அதன் பின்னர் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.