மேலும்

Tag Archives: ரவி கருணாநாயக்க

புதிய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள் – நாளை பதவியேற்பு நடக்குமா?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – செவ்வாயன்று நாடாளுமன்றில் சூடுபறக்கும்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு வரும் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவுக்கு சவால் விடுத்தார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதம் பந்துல குணவர்த்தன விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமான, முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாத்த்துக்கு வருமாறு மகிந்த ராஜபக்சவிடம் சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் மதுபானம் அருந்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்? – சபையில் குழப்பம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகள், சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையைத் தொடர விடாமல் போராட்டம் நடத்தினர்.

அமெரிக்காவில் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தும் சிறிலங்கா நிதி அமைச்சர்

அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா நிதிஅமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- மகிந்த வீட்டில் தீர்மானம்

சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

சீன நிறுவனங்கள் மோசடிகளில் ஈடுபடுகின்றன- சிறிலங்கா குற்றச்சாட்டு

சீனாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்காவின் முன்னாள் அதிபரால் கைச்சாத்திடப்பட்ட 5.3 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்கள் தொடர்பில் சமரசப் பேச்சுக்களை நடத்துவார் என்று  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளார்.

கோத்தாவிடம் 2 பில்லியன் ரூபா மானநட்டம் கோருகிறார் ரவி கருணாநாயக்க

தனக்கெதிராக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட ‘பொய்யான குற்றச்சாட்டு’ தொடர்பில் நட்டஈடாக இரண்டு பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஏப்ரல் 23இற்குப் பின்னர் திட்டமிட்டபடி நாடாளுமன்றத் தேர்தல் – ரவி கருணாநாயக்க

தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்படாது என்றும், திட்டமிட்டபடி, ஏப்ரல் 23ம் நாளுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோத்தா ஆரம்பித்த பாதுகாப்புத் தலைமையக வளாக கட்டுமானப் பணியும் இடையில் நின்றது

பத்தரமுல்லையில் முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட, புதிய பாதுகாப்புத் தலைமையக வளாக கட்டட நிர்மாணப் பணிகள், நிறுத்தப்பட்டுள்ளன. கட்டட நிர்மாணத்துக்கான நிதி இல்லாமையாலேயே இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.