மேலும்

Tag Archives: மனித உரிமைகள்

பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர்  வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச.

மேற்குலக தூதுவர்களைச் சந்திக்கிறது கூட்டமைப்பு – ஜெனிவா செல்லவும் திட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபரின் விமர்சனம் – மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்பு

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, சிறிலங்கா அதிபரின் அநியாயமான விமர்சனங்களால் ஆழ்ந்த கவலையும் மனச்சோர்வும் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறலில் ஈடுபாடு இல்லை – சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி

பொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பாலியல் வன்முறைகள், பாகுபாடுகள் குறித்த ஐ.நா நிபுணர் சிறிலங்கா வருகிறார்

பாலியல் நோக்கு நிலை மற்றும் பால்நிலை அடையாளத்தின் அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான, ஐ.நாவின் நிபுணரான விக்டர் மட்ரிகன் பொர்லோஸ்  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜெனிவாவுக்கு தயாராகும் பிரித்தானியா – தமிழர் தரப்பின் கருத்தறியும் முயற்சியில் இறங்கியது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பிரித்தானியா இறங்கியுள்ளது.

மார்ச் 20இல் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது சிறிலங்கா குறித்த அறிக்கை

சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை,  வரும் மார்ச் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

சிறிலங்கா ஜனநாயக நடைமுறைகளை மதிக்க வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்

நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி ஐந்தாம் நாள் தேர்தலை நடத்தும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை, ஐ.நா  செயலாளர் நாயகம் அன்ரனியோ குரெரெஸ், கவலையுடன் அறிந்து கொண்டுள்ளார் என்று அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் ஒரு மணி நேரம் ஆலோசனை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபரிடம் ஐ.நா பொதுச்செயலர் கண்டிப்பு

சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.