மேலும்

Tag Archives: போர்க்குற்றச்சாட்டு

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார் – லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்கா இராணுவத்தினர் எந்தவொரு போர்க் குற்றங்களிலும் ஈடுபடவில்லை, ஆனாலும், எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான  ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

பொறுப்புக்கூறலை செய்யாவிடின் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் – சிவில் சமூகம் எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கம் அனுசரணை வழங்கிய ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாக, மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

போரில் ஆங்காங்கே குற்றங்கள் நிகழ்ந்தன – ஒப்புக்கொள்கிறார் கோத்தா

போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்காமல் தப்பிக்க சிறிலங்கா முயற்சி – அமெரிக்க நிபுணர் சந்தேகம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட, நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறாவிடின் குற்றவாளிகளாக ஓரம்கட்டப்படுவோம் – சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப் பின்னடித்தால், அனைத்துலகம் எம்மை ஒதுக்கி வைத்து விடும் என்பதுடன், குற்றவாளிகளாகவும் முத்திரையை குத்தி விடும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

படையினரை போர்க்குற்றச்சாட்டில் இருந்து அரசாங்கம் விடுவிக்கும் – சிறிலங்கா அதிபர் உறுதி

போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறிலங்கா படையினரை விடுவிப்பதற்கு, தமது அரசாங்கம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

மகிந்தவின் நிகழ்ச்சிநிரலில் இருந்து விலகாத பரணகம ஆணைக்குழு

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையையும், உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையையும், நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது அரசாங்கம்.

போர்க்குற்ற விசாரணைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி கொழும்பு வருகை

போர்க்குற்ற விசாரணைக்கு உதவுவதற்காக ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி வந்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்களுக்கு கூட்டமைப்பே காரணம் – வாசுதேவ குற்றச்சாட்டு

சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக அழுத்தங்கள் வலுப்பெற்றதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, போர்க்குற்ற விவகாரத்தை கூட்டமைப்பு அனைத்துலக மயபப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தைப் பாதுகாப்பதே சிறிலங்கா அரசின் பிரதான இலக்காம்

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.