மேலும்

Tag Archives: நல்லிணக்கம்

முழுமையான நல்லிணக்கம் இன்னமும் ஏற்படவில்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்காவில் இன்னமும் முழுமையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என்று கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகி- சிறிலங்கா அதிபரின் செயலராகப் பதவியேற்கவுள்ளவரான ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படும்- ஹர்ஷ டி சில்வா

சிறிலங்கா அரசாங்கம் விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தீர்மான வரைவு ஐ.நா பேரவையில் சமர்ப்பிப்பு – கண்காணிப்பு பணியகம் பற்றி ஏதுமில்லை

சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் காத்திரமான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்தில் எடுத்து, சிறிலங்கா தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கோருகிறது பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

நிலையான அமைதிக்கு நல்லிணக்கம் முக்கியம் – அமெரிக்க குழுவிடம் சம்பந்தன்

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கம் முக்கியமானது என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தேவையில்லை – சந்திரிகா

போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

ஐ.நாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஐ.நா  அதிருப்திகளை வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்காலி தெரிவித்தார்.

சம்பந்தனுடன் தென்னாபிரிக்க தூதுவர் சந்திப்பு – ஒரு மணிநேரம் ஆலோசனை

சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.