மேலும்

Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அரசுடன் முரண்படாத மூலோபாயத்தை கடைப்பிடிக்க வேண்டும் – கூட்டமைப்புக்கு மோடி அறிவுரை

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் முரண்படாத வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மூலோபாயங்களில் மாற்றங்களைச் செய்ய முன்வர வேண்டும் என்றும், பொறுமையாக விடயங்களைக் கையாளுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா நடுவராக வேண்டும் – மோடியிடம் வலியுறுத்துமாம் கூட்டமைப்பு

சிறிலங்காவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது தரப்பு நடுநிலையாளராக இந்தியாவின் தலையீடு அவசியம், என்று உணர்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அபிலாசைகளை நிறைவேற்றும் உரிமை தமிழர்களுக்கு இருக்க வேண்டும் – சுஸ்மாவிடம் சம்பந்தன்

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான இறுதி அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வடபகுதி மீனவர்களின் பிரச்சினை குறித்து சுஸ்மாவுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களின் போது, வடபகுதியில் உள்ள மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகாரப்பகிர்வு குறித்து மோடியுடன் பேசுவோம் – சுமந்திரன்

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கவிழும் நிலையில் கிழக்கு மாகாணசபை – ஆறு உறுப்பினர்கள் ஆதரவை விலக்கினர்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், இன்று விலக்கிக் கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுகள், பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெறுகிறது கூட்டமைப்பு

இரண்டு அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண அமைச்சரவையில் இணைந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் தேசிய அரசு – 100 ஆக அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை

தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 55 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

13 பிளஸ் அழுத்தங்களைக் கைவிட்டது இந்தியா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தியா 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும்படி வலியுறுத்தவில்லை என்று, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.