ஐ.நா விசாரணை அறிக்கை தாமதமின்றி வெளியிடப்பட வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்தல்
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையின் அறிக்கை, ஏற்கனவே திட்டமிட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.