மேலும்

Tag Archives: உள்ளூராட்சித் தேர்தல்

தேர்தல் நாளன்று முப்படைகளும் ரோந்து – தேர்தல் ஆணைக்குழு முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி நீடிக்கும் வரை சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது – முதலமைச்சர்

ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post  என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பிரபலம் தேடுவதற்காக என்னைப் பயன்படுத்துகின்றனர் – வேட்பாளர்கள் மீது விக்கி குற்றச்சாட்டு

உள்ளூராட்சித் தேர்தலில் தனது பெயரைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும், அது தன்னை மட்டுமே பாதிக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் – கருத்து வெளியிட முதலமைச்சர் மறுப்பு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து எதையும் வெளியிட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறும் வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையின் ஒரு அங்கமாக, தனிப்பட்ட அல்லது பொது நிதியில் இருந்து பணத்தையோ அல்லது பொருள் மானியத்தையோ வழங்கும் வேட்பாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

நள்ளிரவுடன் காலாவதியானது புரிந்துணர்வு உடன்பாடு – கூட்டு அரசு நிலைக்குமா?

கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.

மகிந்த அணிக்கு ‘செக்’ வைத்த தேர்தல்கள் ஆணைக்குழு

மகிந்த ராஜபக்சவின் படங்களை சிறிலங்கா பொதுஜன முன்னணி பயன்படுத்த முடியாத வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவது ஏன்?

நீங்கள் குதிரையை தண்ணீர் குடிக்கக் கொண்டுவர முடியும், ஆனால் உங்களால் அதைக் குடிக்க வைக்க முடியாது. இதேபோன்றே, சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி நிறுவகங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றாலும் கூட, தகைமைபெற்ற பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதென்பது  சாத்தியமற்றது.

பெப்ரவரி 7 நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் அனைத்தும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் நாள் நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்  என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலுக்குப் பின் மகிந்தவின் கட்சி அழிந்து விடும் – தயாசிறி ஜெயசேகர

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தும் முயற்சிகளை நாமல் ராஜபக்சவும், பிரசன்ன ரணதுங்கவுமே சீர்குலைத்ததாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மகிந்தவின் கட்சி அழிந்து போய் விடும் என்றும் தெரிவித்துள்ளார்.