மேலும்

புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தம் – அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பத்தரமுல்லையில் உள்ள அவரது செயலகத்தில் நேற்று சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களின் குழுவொன்று, புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

தீவிபத்து தடுப்பு ஒத்திகையே சலாவ வெடிவிபத்துக்கு காரணம்?

கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கு அங்கு நடந்த தீவிபத்து தடுப்பு ஒத்திகை காரணமாக இருந்திருக்கலாம் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

காணாமற்போனதை உறுதி செய்யும் சான்றிதழ்கள் – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவில் போர் நடந்த காலத்தில், காணாமற்போனவர்கள் தொடர்பாக, அவர்கள் காணாமற்போனதை உறுதிப்படுத்தும், சான்றிதழ்களை உறவினர்களுக்கு வழங்குவதற்கு அனுமதிக்கும் சட்டமூலத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சலாவ குண்டுச் சிதறல்களை மயானத்தில் புதைக்க ஏற்பாடு

சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் சிதறிக் கிடக்கும், குண்டுகளின் சிதறல்கள், அந்தப் பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் புதைக்கப்படவுள்ளதாக தொண்டர்படை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக தெரிவித்துள்ளார்.

ஆயுதக் களஞ்சியங்களை இடம்மாற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

கொஸ்கம மற்றும் வியாங்கொட ஆயுதக் களஞ்சியங்களை, சன அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு, அனுமதி கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

தொண்டர் படையினர் 70 ஆயிரம் பேரின் தனிப்பட்ட ஆவணங்கள் நாசம்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இருந்த சிறிலங்கா இராணுவ தொண்டர்படையைச் சேர்ந்த 70 ஆயிரம் படையினரின், தனிப்பட்ட ஆவணங்கள், நேற்றுமுன்தினம் நடந்த வெடிவிபத்தில் முற்றாக அழிந்து போயிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உன்னிப்பான கண்காணிப்பில் வியாங்கொட மத்திய ஆயுதக் களஞ்சியம்

கொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து, வியாங்கொடவில் உள்ள மத்திய ஆயுத மற்றும் வெடிபொருள் களஞ்சியத்தின் தரத்தை சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் நேற்று பரிசோதித்தனர்.

இராணுவ நீதிமன்ற விசாரணை – பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் முடிவு

கொஸ்கம– சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு, விசாரணை நீதிமன்றம் ஒன்றை சிறிலங்கா இராணுவத் தளபதி நியமிப்பார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றி

அமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

பிரித்தானிய இராஜதந்திரிகள் சம்பந்தனுடன் சந்திப்பு

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திரிகள் இருவர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.