மேலும்

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்

புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நாளை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10.30 மணியளவில் அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.

கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 – குறும்படத் திரைக் கதைப் போட்டி

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக ‘குறும்படத் திரைக் கதைப் போட்டி’ நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக ‘இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை’ எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.

வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் – சம்பந்தன் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா?

திருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு  அமெரிக்காவுக்கு,  அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

புதூர் ஆயுதப் பொதி  – பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பினார்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை மீறிச் செயற்படுகிறார் தயான் ஜெயதிலக – பிமல் ரத்நாயக்க

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர்  கலாநிதி தயான் ஜெயதிலகவின் செயற்பாடுகள் தொடர்பாக, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அண்மைய கூட்டத்தில் கரிசனை எழுப்பப்பட்டதாக, ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார்

அரசியல் குழப்பங்களின் போது, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.

மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை

திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரியுள்ளன.

மைத்திரியை மனநல சோதனைக்குட்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த  உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.