சிறிலங்காவின் கோரிக்கையை நிராகரித்தது சீனா
மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவினால் முதலீடு செய்யப்பட்ட திட்டங்களை, பங்குகளாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.
மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவினால் முதலீடு செய்யப்பட்ட திட்டங்களை, பங்குகளாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.
வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நாளை பதவியேற்கவுள்ளார். புதுடெல்லியில் சிறிலங்காவுக்கான தூதுவராக கடந்த எட்டு மாதங்களாகப் பணியாற்றிய எசல வீரக்கோன், புதிய பதவியை ஏற்றுக் கொள்வதற்காக நேற்றிரவு புதுடெல்லியில் இருந்து கொழும்பு திரும்பினார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர், முக்கிய சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஜனசட்டன பாதயாத்திரை கொழும்பை அடையும் போது, அமைதியைக் குழப்பும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு முழு அளவில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் 4000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவிருந்த தேசிய நீரியல்வளப் பண்ணை, பல்வேறு தரப்புகளில் இருந்தும் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளால், வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்றுமாலை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும், நோயாளர் காவு வண்டிச் சேவையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார்.