மேலும்

பிரிவு: செய்திகள்

அம்பாந்தோட்டையில் தொழிற்பயிற்சி நிறுவகத்தை ஆரம்பித்தது சீனா

தெற்கு கைத்தொழில் வலயத்தில் சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்கான தொழிற்பயிற்சி நிறுவகம் ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கலப்பு நீதிமன்ற பரிந்துரை – சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு இன்று வெளியாகும்?

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, கலப்பு நீதிமன்ற விசாரணைப் பரிந்துரை தொடர்பான, தனது நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவிராஜ் கொலை சந்தேகநபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் அனுமதிக்கவில்லை – சிஐடி

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது மெய்க்காவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி அளிக்கவில்லை என்று சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டி – கோத்தா சூசகமான பதில்

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதா- இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர நாளை பிரித்தானியாவுக்குப் பயணம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதிகாரபூர்வ பயணமாக நாளை பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவில் சீனாவின் திட்டங்களை எதிர்மறை சக்திகளால் தடுக்க முடியாது – சீனத் தூதுவர்

சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டாலும், அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் சீனா உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் வெடித்தது மோதல் – 21 பேர் காயம்

அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் இடம்பெற்ற மோதல்களில், 21 பேர் வரை காயமடைந்தனர்.

அரசியலமைப்பு மாற்றம் குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் 3 மணிநேரம் ஆலோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று மாலை 4.50 மணிக்கு ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.

இறுதிக் கட்டத்தை எட்டியது எட்கா உடன்பாடு – இந்திய குழு கொழும்பிலிருந்து புறப்பட்டது

இந்தியா- சிறிலங்கா இடையில் கொழும்பில் இந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து எட்கா உடன்பாடு தொடர்பான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு ஆரம்பம் – பயணிகள் நெரிசல்

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பகுதி நேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.