மேலும்

பிரிவு: செய்திகள்

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க முடியாது – சிறிலங்கா அமைச்சர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணி மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராணுவம், காவல்துறை தலையிடாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியுடன் கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் விடயத்தில் சிறிலங்கா இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன  ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசு ஏற்காது – லக்ஸ்மன் யாப்பா

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் பேரணிகளுக்குத் தடை – இரத்தக்களரியை தடுக்க பாதுகாப்பு அதிகரிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அம்பாந்தோட்டையில் பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

புலிகளின் நினைவுச் சின்னங்களை மீளமைக்க வேண்டும் – மனோரி முத்தெட்டுவேகம

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதம் ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக அடுத்தவாரம் நடத்தப்படவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை உடன்பாடுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கலப்பு விசாரணைக்கு பரிந்துரைத்தது ஏன்?- கலந்தாய்வு செயலணி விளக்கம்

பாதிக்கப்பட்ட மக்கள் உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை கொள்ளாததாலும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிபுணத்துவம் உள்நாட்டில் இல்லை என்பதாலுமே, கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி தெரிவித்துள்ளது.

நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அரசியலமைப்பு மாற்றம்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக நாடு தழுவிய ரீதியில் மக்கள் பிரதிநிதிகள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கும் அப்பால் மீண்டும் ஒருமுறை மக்களுடன் அரசியல் சாசனம் தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாக கண்டியில் உயர் மட்ட பௌத்த மதகுருமார்களுடனான சந்திப்பின் போது அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை – என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர்

உள்நாட்டு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை, விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.