மேலும்

பிரிவு: செய்திகள்

ஐ.நா பொதுச்செயலருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறார் மைத்திரி

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐ.நா பொதுச்செயலருக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலால் பிற்போடப்படுகிறது க.பொ.தஉயர்தரத் தேர்வு

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், க.பொ.த உயர்தரத் தேர்வுகளைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு ஆதரவாக முகநூலில் திரண்டுள்ள 14 ஆயிரம் பேர்

மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு முகநூலில் ஆதரவு பெருகி வருகிறது.

மகிந்தவைப் பிரதமராக்குவதே தனது குறியாம்- பசில் கூறுகிறார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, நாட்டின் அடுத்த பிரதமராக்குவதற்கு தான் முழுஅளவிலான பரப்புரைகளில் ஈடுபடப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஓகஸ்ட் 17இல் நாடாளுமன்றத் தேர்தல் – 10 நாட்களில் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

சிறிலங்காவின் ஏழாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ள நிலையில், எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஓகஸ்ட் 17ம் நாள்- திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – நள்ளிரவில் வெளியாகிறது வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை – சரணடைந்த போராளிகளின் உறவினர்கள் ஐ.நாவில் கதறல்

இலங்கையில் 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமை அமைப்பும் படுகொலைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவருக்கே மரணதண்டனை

மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, மற்ற படையினர் பயந்து போயிருந்த போது தாம் விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அப்துல் கலாம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகிந்தவை மைத்திரி சந்திக்கவில்லை – அதிபர் செயலகம் அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு பேச்சுக்களை நடத்தியதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபர் செயலகம் மறுத்துள்ளது.