வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா
பிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் பைசர் முஸ்தபா.
பிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் பைசர் முஸ்தபா.
நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நாடு முழுவதும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் நீண்டகால நட்பு நாடான சிறிலங்காவில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட அண்மைய அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதலாவது அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி.பெரேரா நேற்று வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் கலைத்துள்ள நிலையில்,தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய, அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக் காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.
நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி தனது மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அதன் நிறுவுனரான பசில் ராஜபக்ச அடம்பிடித்து வருவதால், மைத்திரி- மகிந்த கூட்டணி இடையே முரண்பாடுகள் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.