மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மாகாண சபைகளை, ‘மாகாண அரசு’ என அழைக்கக்கூடாது – சிறிலங்கா அதிபர் கண்டிப்பு

மாகாண சபைகளை,  மாகாண அரசுகள் என்று அழைக்கக் கூடாது என்று நிதி ஆணைக்குழுவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பொதுமன்னிப்பு பட்டியலில் அரசியல் கைதிகள், ஞானசார தேரர் இல்லை

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.

சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா –  300 மில்லியன் டொலர் இந்தவாரம்

சீனாவிடம் பெறவுள்ள 2 பில்லியன் டொலர் கடனுதவியில், முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர் இந்த வாரம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று தகவல்கள்  தெரிவிக்கின்றன.

வலுவடைகிறது சிறிலங்கா நாணயப் பெறுமதி

இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சீனா- சிறிலங்கா இடையில் சுதந்திர வணிக உடன்பாடு

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு இந்த ஆண்டு கையெழுத்திடடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சீனாவின் சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த வாரம் மீண்டும் உருவாகிறது தேசிய அரசாங்கம்?

அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் சாத்தியம் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மனோ கணேசன் கூட்டணி எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரித்துள்ளது.

பணிப்பாளராக கடற்படை அதிகாரி – போர்க்கொடி உயர்த்தும் சுங்க அதிகாரிகள்

சுங்கப் பணிப்பாளராக முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரியை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தின் அதி நவீன ராடர் – புதிய வசதிகளுடன் தயாராகிறது

திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்கள், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படத்தக்க வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன. துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.