மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்காவில் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்கின்றன – பிரித்தானிய அமைப்பு குற்றச்சாட்டு

சிறிலங்காவில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும் சிறுபான்மை தமிழர்கள் மீதான சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தின் சித்திரவதைகள் முக்கியமான பிரச்சினையாக இன்னமும் தொடர்வதாக பிரித்தானியாவைத் தளமாக கொண்ட அனைத்துலக மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைக் களத்தில் 50 முன்னாள் புலிகள்?

எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில், 50இற்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவிடம் பெற்ற கடனை அடைக்க 400 ஆண்டுகள் செல்லும் – அதிர்ச்சித் தகவல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக சீனாவிடம் பெற்ற கடனை சிறிலங்கா அடைப்பதற்கு 400 ஆண்டுகள் செல்லும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன.

இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் – பரிசீலிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா

இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தொடருந்து மற்றும் நெடுஞ்சாலை இணைப்பு வழியை உருவாக்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரையில் சிறிலங்காவிடம் அதிகாரபூர்வமான  தகவலைப் பரிமாறவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தலில் திடீர் திருப்பம் – முக்கிய தகவல்களை வெளியிட்டார் இராணுவ அதிகாரி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒருவரும், கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மகிந்த மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகையாம்- சுசில் பிரேமஜெயந்த கூறுகிறார்

மகிந்த ராஜபக்ச மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகை இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் சுசில் பிரேமஜெயந்த.

தாஜுதீன் கொலை குறித்து மகிந்தவின் விசுவாசிகளான காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை

சிறிலங்காவின் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

ரணிலுக்குப் பின்னால் மக்கள் இருப்பதாக தேர்தல் மேடையில் உளறிய மகிந்தவின் விசுவாசி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரை மேடையில், வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ரணிலுக்குப் பின்னால் நிற்பதாக உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே.

அஞ்சல் வாக்களிப்புக்கு நாளை மறுநாள் கடைசி வாய்ப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறிய அரச பணியாளர்கள், நாளை மறுநாள்- ஓகஸ்ட் 11ஆம் நாள் தமது வாக்குகளை அளிக்க முடியும் என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பலம் தமிழ் வாக்காளர்களின் கையிலேயே உள்ளது – கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும்- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்- அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். கூட்டமைப்பின் பலம் தமது வாக்குகளில்தான் தங்கியுள்ளது என்பதனை ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களும் மறந்து விடக்கூடாது.