மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு சிறிலங்கா அதிபர் தீவிர முயற்சி

பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.

நீதித்துறையின் கரங்களை கட்டிவைத்துள்ள சட்டமா அதிபர் – ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு

சிறிலங்கா நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருப்பதாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடற்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர்

2008ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க, வெலிசறையில் உள்ள சிறிலங்கா கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட விடமாட்டேன் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

தேசிய பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்வேன் என்றும்,  தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா அறிக்கையாளர்- சிறிலங்கா அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம்

சிறிலங்காவில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு விடயத்தில் ஐ.நாவின் தலையீடுகள் தொடர்பாக, கொழும்பு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருக்கும் சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

பொருத்து வீட்டுத்திட்டத் திட்ட உடன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றில் மனு

வடக்கு, கிழக்கில் உலோகத்தினால் ஆன பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பாக, பிரெஞ்சு நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு உடன்பாட்டையும் செய்து கொள்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 வரை நிறுத்தி வையுங்கள் – சிறிலங்கா அதிபர் கோரிக்கை

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம், அதன் தலைவரும், சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

500 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் நிலையம் – ஜப்பான், இந்தியாவுக்கு அழைப்புக் கடிதம்

சிறிலங்காவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் திட்டங்களை அமைப்பதற்கு, ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு  கடிதங்களை அனுப்பவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.திசநாயக்கவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.