மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மத்தல, கொழும்பு துறைமுக திட்டங்களை விரைவுபடுத்துமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம்

மத்தல விமான நிலைய திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுக கொள்கலன் முனைய திட்டம் போன்ற இருதரப்பு  திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துமாறு, சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபரின் சகோதரர் சிறையில் அடைப்பு

பொலன்னறுவவில்  விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அபராதம், இழப்பீடு செலுத்தாவிடின் லலித் வீரதுங்க மேலும் 3 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளதாக இவர்களின் சார்பில் வாதிட்ட சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நிறைவேறியது – இறுதி வாக்கெடுப்பில் நழுவியது கூட்டமைப்பு

100இற்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகிந்தவின் ‘மூவரணி’யில் ஒருவரான லலித் வீரதுங்கவுக்கு 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும்  தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சரத் பொன்சேகாவின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டது, அவரது தனிப்பட்ட கருத்தே என்றும், அது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்றும், நாடாளுமன்றத்தில் அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவில் திருத்தம் செய்யப்படும் – சட்டமா அதிபர்

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில், திருத்தங்கள் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தலை தடுக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா- அவுஸ்ரேலியா கைச்சாத்து

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், அவுஸ்ரேலியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.

எனக்கு எதிராக மகிந்த வாக்களிக்கமாட்டார் – சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினர் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயமாக அதற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.