மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

கைவிரித்தது அவுஸ்ரேலிய தூதரகம்

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய அரசின் தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடலை சிறிலங்காவுக்கு அனுப்பும் வேலை தம்முடையது அல்ல என்றும் அதனை பபுவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களை நெருங்குவதற்காக இராணுவத்தை காட்டி கொடுத்து விட்டார் பசில் – சரத் பொன்சேகா

போரின் போதும் போருக்குப் பின்னரும், இராணுவத்துக்குள் உள்ள தனிப்பட்ட சிலரே குற்றங்களை இழைத்தனர் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் கூறியிருப்பது, தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதற்கான அரசியல் தந்திரம் என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – பீரிசிடம் சம்பந்தன் கோரிக்கை

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மனுஸ் தீவில் உயிரிழந்த தமிழரின் உடலை ஒப்படைக்க 9 ஆயிரம் டொலர் கேட்கிறது அவுஸ்ரேலியா

மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் உடலை  ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலர்களைத் தர வேண்டும் என்று உறவினர்களிடம்  அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழர் மரணம்

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், இலங்கைத் தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஜப்பான் பறந்தார் மகிந்த – தொண்டையில் அறுவைச் சிகிச்சை?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று திடீரென ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பத்து நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

நியூயோர்க்கில் எதிர்பார்த்த முக்கிய சந்திப்புகள் கைகூடாமல் நாடு திரும்பினார் சிறிலங்கா அதிபர்

எதிர்பார்த்தபடி முக்கிய சந்திப்புகள் கைகூடாமலேயே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.

வெறுமையான நாற்காலிகளின் முன் ஐ.நாவில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது, அரங்கில் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன என்று நியூயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சிக் கடலேரியில் மழைநீரைத் தேக்கி குடாநாட்டுக்கு குடிநீர் வழக்க புதிய திட்டம்

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு குடிநீர் வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. 78 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வடமராட்சி கடலேரியில், ஆண்டு மழைவீழ்ச்சியில் 20 சதவீதத்தை தேக்கி வைத்து, அதனை குடிநீர்த் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

மீண்டும் தேசிய சாதனையைப் படைத்தார் வடக்கு வீராங்கனை அனிதா (படங்கள்)

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் என்ற வீராங்கனை சிறிலங்காவின் 43 ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழாவில், கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.