வெறித்துப் போகும் சுதந்திரக் கட்சி கூடாரம் – தொடர்ந்து பாயும் முன்னாள் எம்.பிக்கள்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மேலும் பலர், நேற்று மாலையும் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மேலும் பலர், நேற்று மாலையும் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில், சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இந்த வாரக் கடைசியில் மாலைதீவுக்குப் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்த ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாடியதுடன், ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்தார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த நடவடிக்கைக்கு- அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நிச்சயமாக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதாகவும், 2019 ஜனவரி 05ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நொவம்பர் 5ஆம் நாளிடப்பட்டு, வெளியிட்டுள்ள அரசிதழிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.