மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

மகிந்த பக்கம் ஓடியவர்கள் மீண்டும் ரணில் பக்கம் பாய்ந்தனர்

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர்.

ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நேற்றிரவு நீக்கம் – அலரி மாளிகையில் பதற்றம் அதிகரிப்பு

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

அலரி மாளிகையை விடமாட்டோம் – ஐதேகவும் சூளுரை

ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசியல் குழப்பங்களில் சீனா தலையிடாதாம்

சிறிலங்காவின் உள்நாட்டு அரசியல் குழப்பங்களில் சீனா தலையீடு செய்யாது என்று, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் மைத்திரி – அமைச்சவை திங்களன்று பதவியேற்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு வாழ்த்துக் கூறினார் சீனத் தூதுவர்

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகி்ந்த ராஜபக்சவை, சீன தூதுவர் சென் ஷியுவான் இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இருந்து வெளியேற ரணிலுக்கு நாளை காலை 8 மணி வரை காலக்கெடு

ரணில் விக்ரமசிங்க நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி காலக்கெடு விதித்துள்ளது.

ரணிலுக்கு ஹக்கீம், றிசாத், மனோ ஆதரவு – மகிந்தவின் பக்கம் டக்ளஸ், தொண்டா

கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகள், சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடருவதற்கு, தொடர்ந்தும் ஆதரவளிக்க, முன்வந்துள்ளன.

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது கட்டுப்பாட்டில் என்கிறார் மங்கள

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் வசமானது சிறிலங்கா அரச ஊடகங்கள் – ஒளிபரப்புகள் நிறுத்தம்

சிறிலங்காவில் நேற்று கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அரச ஊடகங்களின் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், நள்ளிரவில் அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் என்பனவற்றை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அரச ஒளிபரப்புகள் செயலிழந்தன.