மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

கொழும்புத் துறைமுகம் வருகிறது இந்தியாவின் மிகப்பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் பாரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’, நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

53 தமிழ்க் கைதிகளின் உடல்களை சிறிலங்கா படையினர் புதைப்பதைக் கண்டேன் – மயானத் தொழிலாளி

1983ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட தமிழ்க் கைதிகள் 53 பேர், இரண்டு கட்டங்களாக சிறிலங்கா இராணுவத்தினரால் பொரளை மயானத்தில் மூன்று பாரிய குழிகளில் புதைக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் அனீஸ் துவான் என்ற மயானக் காவலாளி.

இந்தியக் கடற்படையின் பாய்க்கப்பல்களும் கொழும்பு வந்தன – சீனாவுடன் போட்டி?

சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கும் நிலையில், இந்தியக் கடற்படையின் இரண்டு கடற்பயணப் பயிற்சிப் பாய்க்கப்பல்கள் இரண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

ஆட்சிமாற்றத்துக்குப் பின் முதல்முறையாக மூன்று சீனப் போர்க்கப்பல்கள் கொழும்பு வருகை

ஐந்து நாள் பயணமாக சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் முதல் முறையாக சீனப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

கப்பல் போக்குவரத்து வழி மீது அமெரிக்கா அக்கறை – சிறிலங்கா கடற்படையுடன் ஆலோசனை

இந்தியப் பெருங்கடல் பகுதியின் முக்கியத்துவம்மிக்க வணிக மற்றும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விடுவிக்கப்படாது – பலாலி பாதுகாப்பு மாநாட்டில் ரணில் திட்டவட்டம்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

கிரித்தல இராணுவ முகாமில் இருந்த முக்கிய புலனாய்வு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

கிரித்தல இராணுவ முகாமில் உள்ள முக்கியமான இராணுவப் புலனாய்வு ஆவணங்கள் இராணுவக் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு – இந்தியா விருப்பம்

13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்டு, புதிய அரசியலமைப்பு வரையப்படுவதை இந்தியா விரும்புவதாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் நாடாளுமன்ற உரைக்கு இந்தியா பாராட்டு – நேரில் தெரிவித்தார் ஜெய்சங்கர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை இந்தியா பாராட்டியுள்ளது. இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசிய போது, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிவான் எச்சரிக்கையால் ஆடிப்போட சிறிலங்கா இராணுவ தளபதி – கிரித்தல புலனாய்வு முகாமுக்கு ‘சீல்’

ஹோமகம நீதிவானின் எச்சரிக்கையை அடுத்து, கிரித்தல இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமை, ‘சீல்’ வைத்து மூட சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.