மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இன்று சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் – தமிழிலும் தேசியகீதம் பாட ஏற்பாடு

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வு இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஒன்பதாவது இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே அவர் கொழும்பு வரவுள்ளார்.

மிக்-27 போர் விமானங்கள், எம்.ஐ.24 தாக்குதல் உலங்குவானூர்திகள் அணிவகுப்பில் இருந்து நீக்கம்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய மிக்-27 போர் விமானங்களோ, எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளோ இம்முறை சிறிலங்காவின் சுதந்திர நாள் அணிவகுப்பில் பங்கேற்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மூத்த அதிகாரி கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதியான, மைக்கல் ஜே டிலானி என்ற, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியே கொழும்பு வரவுள்ளார்.

யோசித ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

கடற்படைத் தளபதியின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு, பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் கருத்து – பிரித்தானிய அதிகாரிகளிடம் கூட்டமைப்பு அதிருப்தி

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் – மைத்திரியிடம் விளக்கம் கோருவார் மனித உரிமை ஆணையாளர்

வரும் வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் விளக்கம் கோரவுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முட்டுக்கட்டை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிற்கு ஒத்துழைக்காத சிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைது செய்வதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் படைபலத்தை வெளிப்படுத்தவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வு

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் படைபலத்தை வெளிப்படுத்தும் வகையிலான இராணுவ அணிவகுப்புகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.

சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் யோசித ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப்.யோசித ராஜபக்ச இன்று பிற்பகல் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.