மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ். குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் தேடுதல் – 38 பேர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறப்பு அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இன்று இன்று காலை வரை நடத்திய பரவலான தேடுதல்களில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை விட்டு வெளியேறுகிறது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டவில்லை – முதலமைச்சர் குத்துக்கரணம்

வடக்கிலும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தாம் கூறியது முன்னாள் போராளிகளை அல்ல என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொரு இளைஞனும் கைது

கொக்குவிலில் கடந்த மாதம் 30 ஆம் நாள், இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், மற்றொரு இளைஞனைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் – கூட்டமைப்பு கட்சிகள் வழங்கின

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை, முதலமைச்சர் தமது தற்துணிபு மற்றும் சட்டரீதியான அதிகாரங்களின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

‘அம்மாச்சி’ க்கு சிங்களப் பெயர் சூட்டச் சொல்கிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர் குற்றச்சாட்டு

தமிழ்மக்களின் பாரம்பரிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் திறக்கப்பட்ட அம்மாச்சி உணவகங்களுக்குச் சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் வாள்வெட்டு – மேலும் இரண்டு இளைஞர்கள் கைது

கொக்குவில் பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் நாள் சிறிலங்கா  காவல்துறையினர் இருவர் மீது வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இராணுவத்தை களமிறக்க எதிர்ப்பவர்கள் குற்றச்செயல்களுக்கு துணை போகிறவர்களாவர் – விக்னேஸ்வரன்

போர்ப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு

வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொக்குவில் வாள்வெட்டு – இரண்டு இளைஞர்கள் கைது

கொக்குவில் பகுதியில் நீதிமன்றக் கட்டளைகளை விநியோகிக்கச் சென்ற கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் மீது வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியவர்கள் என்ற சந்தேகத்தில், இரண்டு பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.