மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

கிளிநொச்சி விபத்தில் 5 சிறிலங்கா படையினர் பலி- ஒருவர் ஆபத்தான நிலையில்

கிளிநொச்சி – 55 ஆவது கட்டையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்த சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 5 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வசாவிளானில் குண்டுவெடிப்பு – சிறிலங்கா இராணுவச் சிப்பாய் பலி, இருவர் படுகாயம்

பலாலி பெருந்தளப் பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

யாழ். பல்கலைக்கழக சுற்றிவளைப்பில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் நேற்று சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளியிடம் நாலாம் மாடியில் விசாரணை

முகநூல் பதிவு ஒன்றுக்கு விருப்பம் (Like) தெரிவித்த முன்னாள் போராளி ஒருவர், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு காவல்துறை தலைமையகத்தின் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

யாழ். ஊடகவியலாளர் தயாபரன் படுகாயம் – உந்துருளி விபத்து குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் -புத்தூரில், உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த ஊடகவியலாளர் ஆர்.தயாபரன், யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்டைதீவில் கடற்படைக்கு காணி ஆக்கிரமிப்பு – அளவீடு செய்யும் முயற்சி தோல்வி

மண்டைதீவில் சிறிலங்கா கடற்படையினருக்கு 18 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்காக, நில அளவீடு செய்யும் முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

மன்னார் புதைகுழி கார்பன் ஆய்வு அறிக்கையை விக்னேஸ்வரன் நிராகரிப்பு

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் மண்டியிட்டார் வடக்கு ஆளுநர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்புத் தொடர்பாக, தாம் கூறிய விடயங்கள் உள்ளூர் ஊடகங்களில் தவறாக மேற்கோள்காட்டப்பட்டு, தவறாக பிரசுரிக்கப்பட்டிருப்பதற்காக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, போர்க்குற்றங்கள் தோடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறிலங்கா விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய பேரணி நடத்தப்பட்டது.

வடக்கில் 248 பாடசாலைகளுக்கு மூடுவிழா

வடக்கு மாகாணத்தில் உள்ள 248 பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.