மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

சாவகச்சேரி நகரசபைக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் அரசுக் கட்சி

சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

உதயசூரியன் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில், புதியதொரு அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும் முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள்  இன்றும் நாளையும் தொடர்ந்து இடம்பெறும் என்று தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலர் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

ஆனந்தசங்கரியுடனான கூட்டு தற்காலிக ஏற்பாடு தான் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

உள்ளூராட்சித் தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவமற்றது என்றும், இந்தத் தேர்தலில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் தமது முடிவு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பலமான கூட்டணியாக கூட்டமைப்பு போட்டியிடும் – மாவை

உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடுகள் மற்றும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நேற்று 6 மணிநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளன. நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பித்த பேச்சுக்கள், இரவு 9 மணி வரை நீடித்தன.

27 ஆண்டுகளுக்குப் பின்னர் வசாவிளானில் 29 ஏக்கர் காணிகள் சிறிலங்கா படையினரால் விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், வசாவிளான் பகுதியில் 27 ஆண்டுகளாக சிறிலங்கா படையினர் வசம் இருந்து வந்த 29 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேகரி நகர சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி

வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்புமனுக் கோரப்பட்டுள்ள ஒரே ஒரு சபையான சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு எழுச்சியுடன் அஞ்சலி

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழத்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் மாவீரர்களுக்கு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.

கஜேந்திரகுமாருடன் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை – முதலமைச்சர்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அணியினருடன் தாம் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார்.