நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் துப்பாக்கிச் சூடு – காவல்துறை அதிகாரி பலி
நல்லூரில் நேற்று மாலை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவரது மெய்ப்பாதுகாவலரான காவல்துறை சார்ஜன்ட் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.