வடக்கிற்கு வருமாறு மலேசியப் பிரதமருக்கு விக்னேஸ்வரன் அழைப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக்கை வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக்கை வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாநகர முதல்வர் பதவிக்கான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வடமாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்ட் களமிறங்குவதாக வெளியான செய்திகளை தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் மறுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்டை நிறுத்த தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில், நேர்மையான, ஊழலற்ற, சேவைமனப்பாங்குடைய, மக்களை நேசிக்கும், பண்பும் கொண்ட திறமையான வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
காணிப் பிணக்குகள் குறித்து ஆராய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திணைக்களங்கள் மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலர்கள் புறக்கணித்துள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நான்கு மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிட ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக, யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்ட வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 50 வரையான முஸ்லிம் வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, தமிழ் அரசுக் கட்சிக்கும், புளொட்டுக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.