மார்ச் 3ஆம் நாள் நாடாளுமன்றம் கலைப்பு
சிறிலங்கா நாடாளுமன்றம் 2020 மார்ச் 3ஆம் நாளுக்குப் பின்னர் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றம் 2020 மார்ச் 3ஆம் நாளுக்குப் பின்னர் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதில், எந்த அரசியலும் இல்லை என்றும், காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே, அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், எடுக்கப்படுவதாகவும், சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தம்மைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
வீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, சாரதியின் மீது பழி போட்டு விட்டுத் தப்பிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை, கொழும்புக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
தனது அரசியல் வாழ்க்கையை கெடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் சம்பிக்க ரணவக்க முறையிட்டுள்ளார்.
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்துடன், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்களம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமது தூதரகப் பணியாளர் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து, சிறிலங்கா நடத்திய விசாரணையில் திருப்தி அடையவில்லை என்ற சுவிஸ் அறிக்கை, சிறிலங்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் . பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் தக்ஷிண லங்கா பிரதம சங்க நாயக்கர் வண. ஓமல்பே சோபித தேரர்.
தேசியப் பிரச்சினைக்கு எந்தவொரு சூழலிலும், சமஷ்டித் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.