மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சீனாவுக்கு இன்று புறப்படுகிறார் மங்கள சமரவீர

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை இன்று சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் கடந்த மாதம் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், உயர்மட்ட அமைச்சர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இணைந்து கொள்ள யோசித ராஜபக்சவுக்கு அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில், அவரது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப். யோசித ராஜபக்ச இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் சசி வீரவன்ச கொடுத்த அதிர்ச்சி

நோயாளர் காவு கட்டிலில் நேற்றிரவு வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச இன்று காலை சாதாரணமான முறையில் நீதிமன்றத்துக்கு நடந்து வந்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்துலக மன்னிப்புச் சபை தனது ஆண்டறிக்கையில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் தேசிய அரசு – 100 ஆக அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை

தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 55 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் பரப்புரை இன்று நள்ளிரவுடன் முடிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு வரும் 28ம் நாள் நடக்கவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறது பொது பலசேனா

அரசியலில் நுழைவது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும், வரும் ஏப்ரலுக்குப் பின்னர் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடக் கூடும் என்று, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம் – தேர்தல் பிற்போடப்படலாம்?

இந்த ஆண்டு நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல், ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.

கதிர்காமத்தில் மகிந்த குடும்பத்துடன் வழிபாடு – மீண்டும் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் திட்டம்?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கதிர்காமத்தில் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக் காலை வரை வழிபாடு நடத்தியுள்ளார்.

சசி வீரவன்சவுக்கு விளக்கமறியல் – மோசடிக்கு விமல் வீரவன்சவும் உடந்தை

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திரக் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை வரும், 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.