மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அரச செலவினம் 356 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு – வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடந்து வரும் நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுப் பிரேரணையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று திருத்தங்களை முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

சிறிலங்காவின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி மாவட்டம் கிடையாது – சிறிலங்கா அரசு அறிவிப்பு

கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தனி மாவட்டத்தை அமைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

“கூட்டமைப்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம்” – மத்திய மாகாணசபை உறுப்பினர் ராஜாராம்

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கில் காணிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வுபூர்வமாக வெளியிட்ட கருத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்  என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

சீன நீர்மூழ்கிகளால் இந்தியா சினங்கொள்ளவில்லை – என்கிறது சிறிலங்கா

சிறிலங்கா கடற்பரப்பில் சீன நீர்மூழ்கிகள் நடமாடுவது தொடர்பாக, இந்தியாவுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்று சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையே நாளை சந்திப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளை கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று  நடத்தப்படவுள்ளது.

இந்திய, மாலைதீவு கடலோரக் காவல்படைகளுடன் சிறிலங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி

இந்திய மற்றும் மாலைதீவு கடலோரக் காவல்படைக் கப்பல்களுடன் இணைந்து சிறிலங்கா கடற்படை நான்கு நாள் கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாப்பரசரின் பயணத்தை அண்டி தேர்தல் நடத்த வேண்டாம் – கத்தோலிக்கத் திருச்சபை கோரிக்கை

பாப்பரசர் பிரான்சிஸ் திட்டமிட்டபடி சிறிலங்கா வருவார் என்றும், பாப்பரசரின் வருகைக்குப் பின்னர், அதனை அண்டியதாக தேர்தல் எதையும் நடத்த வேண்டாம் என்று தாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளதாகவும், கத்தோலிக்க ஆயர்கள் கூட்டமைப்பின் ஊடகச் செயலாளரான வண.பிதா. சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் குழு கொழும்பு வந்தது – பாப்பரசரின் பயணம் குறித்து முடிவு செய்யும்

சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலால், பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்காப் பயணம் குறித்த சந்தேகங்கள் நீடிக்கும் நிலையில், பாப்பரசரின் பயணம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக வத்திக்கானில் இருந்து மூன்று பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்துள்ளனர்.

கட்டாரில் இருந்து திரும்பிய முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது

கட்டாரில் இருந்து கொழும்பு திரும்பிய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.