மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அரசியலைக் கைவிட்டார் பசில்- சிறிலங்காவுக்கு இனித் திரும்பி வரமாட்டாராம்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், எனவே, அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரமாட்டார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மகனிடம் இன்று விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான லெப்.யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இரவில் கண்மூடுகிறது மகிந்தவின் மாத்தல விமான நிலையம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மாத்தல அனைத்துலக விமான நிலையம் இரவு நேரத்தில் மூடப்படவுள்ளது.

‘இரகசியத் தடுப்பு முகாம்கள் இல்லை’ – மகிந்த பாணியில் கைவிரித்தார் ரணில்

சிறிலங்காவில் இரகசியத் தடுப்பு முகாம்கள் எவையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ருக்மலி சிறி தர்மலோக  விஜயலோக மகாவிகாரையில், பௌத்த பிக்குகளுடன் நடத்திய உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் – இம்மாதம் வழங்கப்படுகிறது

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் அதிகாரத்துக்கு வரும் ராஜபக்சவினரின் திட்டம் தோல்வி

ஊவா மாகாணசபை முதலமைச்சராக தம்மை மீண்டும் நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மகிந்த அரசின் ஊழல்களை விசாரிக்க அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியாவிடம் உதவி

முன்னைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விசாரணையை இடைநிறுத்த 300 மில்லியன் ரூபா இலஞ்சம்

காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட, மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு, முக்கிய அமைச்சர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க, குறிப்பிட்ட கடல் பாதுகாப்பு நிறுவனம் முயன்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு விசாரணை செப்ரெம்பருக்குள் முடியாது – சிறிலங்கா அரசு கூறுகிறது

போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணை வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் நிறைவடையாது என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்கள் கடத்தல் குறித்து சிறிலங்கா கடற்படை முன்னாள் பேச்சாளரிடம் விசாரணை

கொழும்பிலும், திருகோணமலையிலும், தமிழ் இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்கவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.