மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வெலிக்கடையின் ‘எஸ்’ விடுதி புனரமைப்பு – முக்கிய பிரமுகர் கைதுக்கு முன்னேற்பாடு

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயகுமாரணதுங்க போன்ற முக்கிய பிரமுகர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறைச்சாலையின் ‘எஸ்’ விடுதி, புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பூர் கடற்படைத்தளம் விரைவில் இடம்மாற்றம் – நாடாளுமன்றில் அறிவிப்பு

திருகோணமலை, சம்பூரில் உள்ள விதுர கடற்படைத் தளம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்று, நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார்.

நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் அரசுக்கு எதிராகப் போராட மகிந்த அறைகூவல்

நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட அனைவரையும் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத சிராந்தி – மகிந்தவும் கண்கலங்கினார்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நேற்று இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட யோசித ராஜபக்சவுக்கு, பிணை வழங்க நீதிவான் மறுத்த போது, அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச கண்ணீர் விட்டு அழுததுடன், மகிந்த ராஜபக்சவினது கண்களும் கலங்கிப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா அதிபர் ஒருபோதும் ஏற்கமாட்டார் – பைசர் முஸ்தபா

போர் தொடர்பான பொறுப்புக்கூறல் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதை சிறிலங்கா அதிபரோ, அரசாங்கமோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா.

அனைத்துலக அழுத்தங்களும், சவால்களும் இன்னமும் நீடிக்கின்றன – சிறிலங்கா அமைச்சர்

உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்கான அனைத்துலக அழுத்தங்களும் சவால்களும் இன்னமும் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார், அமைச்சர் மகிந்த சமரசிங்க.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் அத்துமீறல் – பீரிஸ்

சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அத்துமீறியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

14 முன்னாள் புலிகள் புனர்வாழ்வுக்கு செல்ல மறுப்பு

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 14 பேர், புனர்வாழ்வுக்குச் செல்வதற்கு நீதிமன்றத்தில் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

பௌத்த குருமார் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு – சிறிலங்கா உயர்நீதிமன்றம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பௌத்த குருமார் தொடர்பான ‘தேரவாதி கதிகாவத்’ சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அனைத்துலக கண்காணிப்புடன் போர்க்குற்ற விசாரணை – வலியுறுத்துகிறார் சரத் பொன்சேகா

சிறிலங்கா மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக கண்காணிப்பாளர்களின் பங்களிப்புடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார், முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.