சிறிலங்கா பிரதமருடன் சம்பந்தன் சந்திப்பு – காணிகள் விடுவிப்பு, கைதுகள் குறித்து பேச்சு
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் திடீரென அதிகரித்துள்ள கைதுகள் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேச்சு நடத்தியுள்ளார்.