மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஒரே நாளில் மாகாணசபைகளுக்குத் தேர்தல் – புதிய சட்டம் கொண்டு வருகிறது அரசாங்கம்

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முதல் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

நீதிபதியின் இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரியின் உடலுக்கு வடக்கு முதல்வர் அஞ்சலி

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த- சிறிலங்கா காவல்துறை அதிகாரியான சரத் பிறேமச்சந்திரவின் உடலுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபருக்கு சம்பந்தன் கடிதம்

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நான்கு வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஆரம்பகால செயற்பாடுகளே நினைவுக்கு வருகிறது – என்கிறார் மகிந்த

யாழ்ப்பாணத்தில் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால செயற்பாடுகளை தமக்கு நினைவுபடுத்துவதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஐ.நா நிபுணர் – புலிச்சந்தேக நபர்கள் சந்திப்பு விதிமுறைகளுக்கு அமையவே நடந்தது – ரவி கருணாநாயக்க

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்ட விடயத்தில், முன்னைய அரசாங்கத்தின் நடைமுறைகளே பின்பற்றப்பட்டன என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோகும் – எச்சரிக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

லலித் ஜெயசிங்கவை சேவையில் இருந்து இடைநிறுத்த தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க சிறிலங்கா காவல்துறையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்க விவகாரம் – இரண்டாக உடைந்தது கூட்டு எதிரணி

அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது.