சிராந்தி ராஜபக்சவிடம் நாளை விசாரணை
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன்பாக, சிராந்தி ராஜபக்ச நாளை முன்னிலையாகவுள்ளார். சிராந்தி ராஜபக்சவின் ஊடக இணைப்பு அதிகாரி அனோமா வெலிவிற்ற இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சிராந்தி ராஜபக்சவை நாளை விசாரணைக்கு வருமாறு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விடுத்திருந்த நிலையில், அவர் நாளை காலை 9.30 மணிக்கு, விசாரணைக்கு சமூகமளிக்கவுள்ளார்.
கார்ல்டன் சிரிலிய சவிய பவுண்டேசன் என்ற அமைப்பின் வங்கிக் கணக்குத் தொடர்பான விசாரணைக்கே சிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் காப்பாளராக சிராந்தி ராஜபக்ச இருந்து வருகிறார்.
அதேவேளை, சிராந்தி ராஜபக்ச தனது மனிதாபிமானப் பணிகளுக்கு வெளிநாட்டில் இருந்து வெளிப்படைத் தன்மையுடன் நிதிகளைப் பெற்றுள்ளதாகவும், அவர் எந்த வகையிலும் அரசியலில் தொடர்புபடவில்லை என்றும் அவரது ஊடக இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.