மேலும்

சீன- சிறிலங்கா கல்வி, ஆராய்ச்சி மையத்தின் கருத்தரங்கு

சீன-சிறிலங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டு மையம் அமைக்கப்பட்டதன் 10வது ஆண்டு நிறைவு, வியாழக்கிழமை கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் காலநிலை மாற்றம் மற்றும் கடல்சார் நிலையான வளர்ச்சி குறித்த 10வது சீன-சிறிலங்கா கூட்டு கருத்தரங்கு வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.

சீனா, சிறிலங்கா, அவுஸ்ரேலியா மற்றும் மாலைதீவுகள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர்

2015 இல் நிறுவப்பட்ட இந்த மையம்,  கடந்த தசாப்தத்தில், இந்தியப் பெருங்கடலைக் கண்காணித்தல், கடல்சார் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் நிபுணர்களின் பரிமாற்றம் ஆகியவற்றில் சீனாவும் சிறிலங்காயும் ஒத்துழைக்க உதவியுள்ளது.

அறிவியல் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு சீன-சிறிலங்கா நட்பு ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகள் என்று, இந்த கருத்தரங்கில் உரையாற்றிய சிறிலங்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஜு யான்வே,  தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் நெருக்கமாகப் பணியாற்றவும், இருதரப்பு விஞ்ஞான தொழில்நுட்ப ஒத்துழைப்பில் புதிய தளத்தை உருவாக்கவும், இருநாடுகளின் மக்களுக்கும் அதிக நன்மைகளை வழங்கவும் சீனா தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

இந்தப் பயிலரங்கில் பங்கேற்றவர்கள், இந்தியப் பெருங்கடலில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழலைக் கண்காணித்தல் மற்றும் கடலோரப் பகுதிகளில் பேரிடர் தடுப்பு உள்ளிட்ட பல தலைப்புகள் குறித்து ஆழமான பரிமாற்றங்கள் மற்றும் விவாதங்களை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *