மேலும்

Archives

அமெரிக்க விமானங்தாங்கிக்கு சிறிலங்காவில் இருந்து விநியோகம்

சிறிலங்காவின் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக விநியோக மையத்தில் இருந்து, அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் விமானந்தாங்கி கப்பலுக்கான பொருட்கள் விநியோகம் நேற்று முன்தினம் தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துப் படகுகளை வழங்கியது அவுஸ்ரேலியா

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை நேற்று வழங்கியுள்ளது. ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இந்தப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படையின் ரங்கல்ல தளத்தில் இடம்பெற்றது.

ஜெனிவாவுக்கு தயாராகும் பிரித்தானியா – தமிழர் தரப்பின் கருத்தறியும் முயற்சியில் இறங்கியது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பிரித்தானியா இறங்கியுள்ளது.

ஜப்பானிய, அவுஸ்ரேலிய தூதுவர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான ஜப்பானியத்  தூதுவர் அகிரா சுகியமாவும், சிறிலங்காவில் பணிக் காலத்தை முடித்து நாடு திரும்பவுள்ள அவுஸ்ரேலிய  தூதுவர் பிரைஸ் ஹட்ச்ஸ்னும், நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

விமானந்தாங்கி கப்பலுக்கு மீண்டும் விநியோகம்- கட்டுநாயக்கவில் அமெரிக்காவின் தற்காலிக தளம்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ்  விமானந்தாங்கி கப்பலுக்கு சிறிலங்காவில் உள்ள அமெரிக்க கடற்படையின் தற்காலிக விநியோக மையத்தில் இருந்து, பொருள்களின் விநியோகம் இடம்பெறுவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் கேணல் ஜெனரல் அலெக்சான்டர் போமின், ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

முகநூல் அதிகாரிகள் குழுவுடன் மஹிந்த ராஜபக்ச பேச்சு

சிறிலங்கா எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, முகநூல் நிறுவனத்தின்  அதிகாரிகள்  குழுவுடன்  நேற்று   பேச்சுக்களை நடத்தியுள்ளார்.  மஹிந்த ராஜபக்சவின்  இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்?’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.

நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவ வாகனம், முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானத்தில், அதில் பயணம் செய்த மேஜர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பலியாகினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

சிறிலங்கா அதிபரின் பிலிப்பைன்ஸ் பயணம் அரச நிதி வீணடிப்பு – ஹர்ஷ டி சில்வா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் பயணம், எந்தத் திட்டமும் இன்று மேற்கொள்ளப்பட்டது என்றும், இதனால் அரசாங்கம் பயணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.