மேலும்

Archives

கோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை

அரச புலனாய்வுச் சேவையை, ஒரு சுயாதீன அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும், அது சட்டத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க, சிறிலங்கா அதிபர்  மூன்று பேர் கொண்ட  சிறப்புக் குழு தெரிவித்துள்ளது.

பொறுப்பை ஒப்படைத்து விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்காவின் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

மகிந்தவுடன் கனடிய தூதுவர், அகாஷி தனித்தனியே சந்திப்பு

சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன், நேற்று சிறிலங்காவின்  எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார். மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா இராணுவத் தளபதியானார் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

காஷ்மீர் அதிர்வலைகள் –  பகுதி 2

பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அமெரிக்க  அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பதற்கு தடையாக,  பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்து வந்தன.

அனுரகுமாரவை வேட்பாளராக அறிவித்தது ஜேவிபி

சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஜேவிபியின் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார போட்டியிடுவார் என, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த தேரர்களிடம் மண்டியிட்டு ஆசி பெறும் கோத்தா

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, தொடர் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1

காஷ்மீர்  தெற்காசியாவின் அரசியலில் முக்கிய நகர்வு ஒன்றை கண்டிருக்கிறது. முன்பு இருந்த தனித்துவமான அதிகாரங்களை இழந்து இந்திய மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு அரசியல் பிராந்தியமாக  இருந்த பிரதேசம் இன்று இரண்டு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டுள்ளது.

நொவம்பரில் நாட்டின் அதிபராவேன் – பதுளையில் சஜித் சூளுரை

ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக, பதுளையில் நேற்று பாரிய கூட்டம் நடத்தப்பட்டது. இங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாச, நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாகவும், வரும் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.