ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை
பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்தில் இருந்து, முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளில், தமிழ்நாட்டில் உள்ள எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.
சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் வடக்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மத்தல அனைத்துலக விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது ஏன் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும், 15ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது.