கேப்பாப்புலவில் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்
சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ முகாமின் பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


