மேலும்

Tag Archives: கடற்படை

முறைகேடாக கடற்படையில் இணைந்த யோசித ராஜபக்ச – நாடாளுமன்றில் அறிக்கை

சிறிலங்கா அதிபர் செயலகத்தின் அறிவுரையின் பேரில், லெப்.யோசித ராஜபக்ச மீது, சிறிலங்கா கடற்படை நடவடிக்கையை எடுக்கும் என்று சிறிலங்கா அரசின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மரைன் படைப்பிரிவை உருவாக்குகிறது சிறிலங்கா கடற்படை – அமெரிக்காவும் உதவி

கடலிலும் தரையிலும் போரிடும் ஆற்றல் கொண்ட மரைன் படைப்பிரிவை சிறிலங்கா கடற்படை புதிதாக உருவாக்கி வருவதாக சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கப்பல் போக்குவரத்து வழி மீது அமெரிக்கா அக்கறை – சிறிலங்கா கடற்படையுடன் ஆலோசனை

இந்தியப் பெருங்கடல் பகுதியின் முக்கியத்துவம்மிக்க வணிக மற்றும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

ஆட்கடத்தல்களுக்கு சிறிலங்கா கடற்படை பயன்படுத்திய வான் கைப்பற்றப்பட்டது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், தெகிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு ஆட்கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றை, திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சிறிலங்கா கடற்படையுடனான உறவுகளை துண்டிக்க வேண்டும் – அனைத்துலக அமைப்பு கோரிக்கை

சிறிலங்கா கடற்படையின் திருகோணமலை தளத்தில் இரகசிய தடுப்பு முகாமை, ஐ.நா குழு கண்டறிந்துள்ளதையடுத்து, சிறிலங்காவுடனான கடற்படை ஒத்துழைப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்று உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் கோரியுள்ளது.

இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பாக 3 சிறிலங்கா கடற்படையினர் கைது?

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் அமைந்திருந்த இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாமைக் கண்டுபிடித்ததாக ஐ.நா குழு அறிவிப்பு

திருகோணமலை சிறிலங்கா கடற்படை தளத்தில், இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றைத் தாம் பார்வையிட்டதாகவும், அது தமது பயணத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு எனவும், பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகள் பேச்சு

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் கடல்சார் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக சிறிலங்கா – அமெரிக்க கடற்படைகளுக்கு இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடற்படையிடம் ஒப்படைக்கப்படவில்லை – ராஜிதவின் அறிவிப்பை விஜேதாச நிராகரிப்பு

அவன் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிடவில்லை என்றும் அதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறே அதிகாரிகளை கேட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘போர்க்குற்றச்சாட்டுகள் முதல் அவன்கார்ட் வரை’ – சரத் பொன்சேகாவின் செவ்வி

இறுதி போரில் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக வெளியிட்டப்படும் சில காணொளிகளை ஏற்க முடியாது, ஒருசில சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம், அதுபற்றி முறையான விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று  சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.