மதுரையில் முள்வேலி ஊடாக விமானத்துக்குச் சென்ற சிறிலங்கன் விமான சேவை பணியாளர்கள்
தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் தடைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தினால், மதுரையில் சிறிலங்கன் விமானசேவை விமானிகளும், பணியாளர்களும் முள்வேலிகளைக் கடந்து விமானத்துக்குச் செல்லும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.