மேலும்

Tag Archives: மனித உரிமை

வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்திய செயிட் அல் ஹுசேன் – பதிலளிக்காது நழுவியது சிறிலங்கா

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கை தொடர்பாக சிறிலங்கா நழுவலான பதிலையே அளித்துள்ளது.

எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை தான் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விடாப்பிடி

சிறிலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவிசைவு வழங்க மறுத்தது அவுஸ்ரேலியா

போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவிசைவு வழங்க அவுஸ்ரேலியா மறுத்துள்ளது.

ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம்

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

ஜெனிவா தீர்மானம் கலப்பு நீதிமன்றத்தை வலியுறுத்தவில்லையாம்- ரணில் கூறுகிறார்

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் இணங்கவில்லை என்றும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கே அரசாங்கம் இணங்கியது என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நீதிபதிகளை அழைக்க அரசியலமைப்பில் இடமில்லை – கைவிரித்தது சிறிலங்கா

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவோம் – அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கணிசமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அமெரிக்கா அதில் தொடர்ந்து இணைந்திருக்காது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன் எச்சரித்துள்ளார்.

தீர்மான வரைவு ஐ.நா பேரவையில் சமர்ப்பிப்பு – கண்காணிப்பு பணியகம் பற்றி ஏதுமில்லை

சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தீர்மான வரைவை நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்தியாவின் உதவியை நாடுகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தொடர்ச்சித் தீர்மான வரைவின் தொனி மற்றும் மொழிநடையை மேலும் நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளில் சிறி்லங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறைமையுள்ள நாட்டைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் உள்ள எல்லா பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.