மேலும்

Tag Archives: ஜெனிவா

மேற்குலக தூதுவர்களைச் சந்திக்கிறது கூட்டமைப்பு – ஜெனிவா செல்லவும் திட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொறுப்புக்கூறலில் ஈடுபாடு இல்லை – சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி

பொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மார்ச் 20இல் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது சிறிலங்கா குறித்த அறிக்கை

சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை,  வரும் மார்ச் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

நாடு மீண்டும் வன்முறைக்குத் திரும்பும் அபாயம் – பிரித்தானிய அமைச்சரிடம் சம்பந்தன்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மெதுவாகச் செயற்படுகிறது சிறிலங்கா – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு

நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அதிகாரிகள் மிகவும் மெதுவாகவே செயற்படுகின்றனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காத சிறிலங்கா – ஜெனிவாவில் இருந்து கடிதம்

சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த சிசிர மென்டிசுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு குறித்த அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கத் தவறியது குறித்து, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஆயுதக் களைவு குறித்த ஜப்பானிய தூதுவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு

ஆயுதக்களைவு பிரகடனம் தொடர்பான, ஜெனிவாவுக்கான ஜப்பானின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி  நொபுஷிகே தகாமிசாவா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்

ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றுள்ளார்.