மேலும்

Tag Archives: கரு ஜெயசூரிய

சிறிலங்கா அதிபரின் சட்டவிரோத உத்தரவுகளை புறக்கணிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய, அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார்.

கரு ஜெயசூரிய விரைவில் பதிலளிக்க வேண்டி வரும் – எச்சரித்த மைத்திரி

அரசியலமைப்புக்கு எதிராகச் செயற்பட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய விரைவில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 14 ஆம் நாள் வாக்கெடுப்பு – சபாநாயகர் உறுதி

சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ம் நாள் கூடும்போது, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர் – நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தினார்

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக பொறுப்பேற்றுள்ள அலய்னா ரெப்லிட்ஸ், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதித்துள்ளார்.

மகிந்தவுக்கு ‘அரியாசனம்’ கிடையாது – ஆப்பு வைத்தார் சபாநாயகர்

மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு, நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது என்றும்,  தற்போதைய ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர முடியும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

திங்களன்று நாடாளுமன்றைக் கூட்டுகிறார் மைத்திரி – அழுத்தங்களுக்கு அடிபணிந்தார்

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தை வரும் நொவம்பர் 5ஆம் நாள்- திங்கட்கிழமை – கூட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது – என்ன சொல்கிறார்கள்? – நடப்புகளின் சங்கமம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கருவின் தொலைபேசி அழைப்பு நினைவில் இல்லை- விசாரணையில் மழுப்பிய மகிந்த

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சபாநாயகருமான கரு ஜெயசூரிய தனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தாரா என்று ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

மாகாண சபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் இல்லை – கைவிரித்தார் சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.