சிறிலங்கா படைகளை ஓரம்கட்ட முனையும் வேளை முக்கியமான திருப்பம் – அட்மிரல் கரன்னகொட
பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவத்தை ஒதுக்கி வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற நேரத்தில், சிறிலங்கா படையினருடன் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள அவுஸ்ரேலியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார்.