மேலும்

Tag Archives: ஈரான்

மின் உற்பத்திக்கான எரிபொருளை இந்தியாவிடம் கோரியது சிறிலங்கா

மின் உற்பத்திக்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றை  வழங்குமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானியக் கப்பல்களுக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்திருந்தது – தூதுவர் விளக்கம்

சிறிலங்கா அரசாங்கம், மூன்று ஈரானியக் கப்பல்களான ஐஆர்ஐஎஸ் டேனா, ஐஆர்ஐஎஸ் புஷேர் மற்றும் ஐஆர்ஐஎஸ் லாவன் ஆகியவற்றை நல்லெண்ணப் பயணத்திற்காக, அதிகாரப்பூர்வமாக அழைத்திருந்தது என்று, சிறிலங்காவுக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கிற்கு மாற்றாக “மத்தல“வை முன்மொழிந்துள்ள சிறிலங்கா

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களால்,மத்திய கிழக்கு வான்வெளியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, நீண்டதூர விமானப் பயணங்களுக்கான மாற்று மையமாக மத்தல  மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா முன்மொழிந்துள்ளது.

அனுரவின் ‘பிரிக்ஸ்’ நிராகரிப்பு- சிறிலங்காவுக்குப் பாதகமாகுமா?

அனுரகுமார திசாநாயக்க சிறிலங்கா அதிபரானவுடனேயே, சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் அவரைச் சந்திக்க வந்தார். இந்தச் சந்திப்பின் போது, ​​ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடமிருந்து வந்த ஒரு சிறப்பு தனிப்பட்ட அழைப்பிதழை அவர் அனுரவிடம் வழங்கினார்.

இந்திய- அமெரிக்க பாதுகாப்பு உறவுகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்

சிறிலங்காவின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அதிகாலை 5 மணிக்குப் பிறகுதான் பேரிடர் அழைப்பு வந்தது. சிக்கலில் இருந்த கப்பல், சிறிலங்காவின் மீட்பு கடமைக்குள் இருப்பதாகவும், கருதினர். தெற்கு நகரமான காலியின் கடற்கரையிலிருந்து 19 கடல் மைல்களுக்கு சற்று தொலைவில் அது இருந்தது.

ஈரானிய மாலுமிகளின் சடலங்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படும்

சிறிலங்கா அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கடற்படைக் கப்பல்  மூழ்கடிக்கப்பட்டதில், கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைகளை உயர்த்தியது சிறிலங்கா அரசாங்கம்.

சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், நடைமுறைக்கு  வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

சிறிலங்கா நடுநிலை, அணிசேரா கொள்கையையே பின்பற்றுகிறது

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சிறிலங்கா நடுநிலை மற்றும் அணிசேரா கொள்கைளை பின்பற்றி வருவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைவர்கள் படுகொலை- இரங்கல் தெரிவிக்க தயங்கும் சிறிலங்கா

ஈரானிய அரச தலைவர்கள் மற்றும் போரில் கொல்லப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைத்து இறப்புகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் இரங்கல் செய்தியை வெளியிடும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் நடவடிக்கைகள் சிறிலங்காவுக்கு தீங்கு விளைவிக்கும்

அமெரிக்க  அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் மற்ற நாடுகளில் அரசாங்கங்களை மாற்ற எடுத்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.