மேலும்

Tag Archives: ஈபிஆர்எல்எவ்

சிவசக்தி ஆனந்தனின் வாக்கு யாருக்கு? – முடிவெடுப்பாராம் சுரேஸ்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனே முடிவு செய்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல் ஆணையம் தடை

ஈபிஆர்எல்எவ் – தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து உருவாக்கிய கூட்டணியினர்  தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.

ஆனந்தசங்கரியுடனான கூட்டு தற்காலிக ஏற்பாடு தான் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

உள்ளூராட்சித் தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவமற்றது என்றும், இந்தத் தேர்தலில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் தமது முடிவு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எவ் – தமிழ் காங்கிரஸ் உறவில் விரிசல் : சங்கரியுடன் சேருகிறார் சுரேஸ்

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் – ஈபிஆர்எல்எவ் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிடும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் முயற்சியில் ஈபிஆர்எல்எவ் இறங்கியுள்ளது.

யாரும் போகலாம், யாரும் வரலாம் திறந்தே கிடக்கிறது கதவு – கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எவரும் வெளியே செல்வதற்கு தடையில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் பாதை சரியா? – மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும் என்கிறார் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை, மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

தமிழ் மக்கள் பேரவை இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஈபிஆர்எல்எவ் பிரிந்து செல்வதால் தமிழ் அரசுக் கட்சிக்கு பாதிப்பு இல்லை – சிவிகே

தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்த, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்காக வருத்தப்படுவதாக வட மாகாணசபையின் அவைத் தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளுங்கள் – யாழ். ஆயர், நல்லை ஆதீனம் கூட்டாக கோரிக்கை

தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளியாமல், சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுப்புடனும் தமது பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று நல்லை ஆதீன குரு முதல்வரும், யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சம்பந்தன் – விக்கி பேச்சில் இணக்கம்? : நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படலாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் தமிழ் அரசுக் கட்சி கைவிடுவதற்கும், இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப எடுத்த முடிவை  முதலமைச்சர் விலக்கிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.