மேலும்

Tag Archives: அரசியல் கைதிகள்

இனியும் ஏமாற முடியாது, பொறுமையின் எல்லை தாண்டிவிட்டது – சுமந்திரன் விசனம்

சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகளை இனியும் நம்பி நம்பி ஏமாற முடியாது, பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த எல்லை தாண்டிவிட்டது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தினர் அரசியல் கைதிகள்

தமது விடுதலைக்காக ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை  மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள், தமது போராட்டத்தை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை; புனர்வாழ்வு

அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ய சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பாக, அரசியல் கைதிகள் இன்று தமது முடிவை அறிவிக்கவுள்ளனர்.

இன்று மேலும் 8 அரசியல் கைதிகளுக்கு பிணை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இன்று முடிவு? – பிரதமர் செயலகத்தில் முக்கிய கூட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இன்று தமது முடிவை அறிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆராய சிறிலங்கா பிரதமர் தலைமையில் இன்று முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று 31 அரசியல் கைதிகளுக்குப் பிணை – உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட மறுப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 31 தமிழ் அரசியல் கைதிகள் முதற்கட்டமாக இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர் தமிழ் அரசியல் கைதிகள்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, வாக்குறுதி வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள், உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காத நிலையில், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

32 தமிழ் அரசியல் கைதிகள் நாளை மறுநாள் விடுதலை – விஜேதாச ராஜபக்ச அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 தமிழ்க் கைதிகள் நாள் மறுநாள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விவகாரம் – மைத்திரி, ரணில், சந்திரிகாவைச் சந்திக்கப் போகிறதாம் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தவாரம் பேச்சு நடத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

சிறைகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத அரசியல் கைதிகள் யாருமில்லையாம்

குற்றச்சாட்டுகளின்றி எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.