மேலும்

பிரிவு: செய்திகள்

வடக்கு மாகாணசபையைக் கலைக்க வேண்டும் – உதய கம்மன்பில போர்க்கொடி

வடக்கு மாகாணசபையைக் கலைத்து விட்டு, அதன் நிர்வாகத்தைக் கையில் எடுக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

மைத்திரிக்கும் இந்தியா வருமாறு அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை புதுடெல்லி வருமாறு, இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மெதிரிகிரியவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே, தமக்கு மீண்டும் இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதான தகவலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.

கிளிநொச்சியில் வைத்தே புலிகளின் முன்னாள் தளபதி ராமிடம் விசாரணை

திருக்கோவில்- தம்பிலுவில் பகுதியில் உள்ள தமது வீட்டில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம், கிளிநொச்சியில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் இருவர் வெள்ளியன்று சிறிலங்கா வருகின்றனர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் இம்மாத இறுதியில், சி்றிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

முன்அனுமதி பெற்றே சம்பந்தன் படைமுகாமுக்குள் செல்ல வேண்டும் – சிறிலங்கா அரசு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் படை முகாம்களுக்குச் செல்லலாம் என்றும், ஆனால் அதற்கான முன்னறிவித்தல் வழங்கப்பட்டு அனுமதி பெற வேண்டும் என்றும், சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை – இரா.சம்பந்தன்

கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் அத்துமீறிப் பிரவேசித்ததாக தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை – சிறிலங்கா இராணுவம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு எதையும் பதிவு செய்யவில்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

சமஸ்டி கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் – மிரட்டுகிறது ஹெல உறுமய

சமஸ்டிக் கோரிக்கைக்கு எதிராக, நீதிமன்றம் செல்லப் போவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

சிறிலங்கா வந்தார் சுவீடன் வெளிவிவகார அமைச்சர்- நாளை யாழ். செல்கிறார்

மூன்று நாள் பயணமாக சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோம் நேற்றுமாலை சிறிலங்கா வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வரவேற்றார்.

வடமாகாணசபையின் தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசு பரிசீலிக்க வேண்டும் – சுமந்திரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள இணைத்து, சமஸ்டி ஆட்சிமுறையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தும், வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை, சிறிலங்கா அரசாங்கமும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.